மூடு

மகா சரஸ்வதி கோவில்

வழிகாட்டுதல்
வகை மதம் சார்ந்த

கல்வித்தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு, தென்னிந்தியாவிலேயே  தனியாக அமையப்பெற்ற ஒரே கோவில் இந்த மகா சரஸ்வதி அம்மன் கோவில்.  இக்கோவில், காரைக்காலுக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந்த கூத்தனூர்.  மேலும் தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழன் இக்கவியின் தமிழ்ப்புலமையை பாராட்டி இக்கிராமத்தை பரிசாக அளித்தார். எனவே இக்கிராமம் கூத்தனது ஊர் என்று பொருள் பட கூத்தனூர் என்றும் கூறுவர்.

விஜயதசமி, இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா. தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள்  வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்விக்கடவுளாம் இச்சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர்.

புகைப்பட தொகுப்பு

  • தரங்கம்பாடி டேன்ஸ்பர்க் கோட்டை
  • நாகூர் ஆண்டவர் தர்கா
  • அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி (160 கி.மீ.) மற்றும் சென்னை (300 கி.மீ.)

தொடர்வண்டி வழியாக

மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் இடையே ரயில் வசதி உள்ளது.

சாலை வழியாக

சாலைகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் இடையே அமைந்துள்ளது. பஸ் நிறுத்தம் பஸ்ஸோட்டம்.